செவ்வாய், 21 அக்டோபர், 2008

என் வானவில்

ரிதன்யாவின் ரசிகர்களில் ஒருவர்
ரிதன்யா போட்டோவுக்காக இந்த கவிதை

மனதை மயக்கும் ஒரு
மாலையில் வெளிவந்தாய் நீ!
குளிர்காற்றோடு அஸ்தமனத்தை
காண்பதற்காய்!
மனித எண்ணங்களின் பலமுகங்களை
பிரதிபலிக்கும் வானவில்லின்
இயற்கையினை வியந்து
இதழ்விரித்து உன் தந்தையை
அழைத்தாய்!
கருவிழிகளை திறந்து நீ
வானவில்லை நோக்குகையில்
ஒரு தேவதையின் அழகான
முகபாவங்களை ரசிக்கிறேன் நான்!
உன்னையே வியக்கவைத்த
வானவில் அழகுதான் ஒத்துகொள்கிறேன்
என்னை வியக்க வைத்த நீ
வானவில்லை விட அழகுதான்
என்பதை உலகம் ஒத்துகொள்ளதான் வேண்டும்

தணிகை(மாமா)
============================================
ரிதன்யாவின் அத்தை தேனி(கொழும்பிலிருந்து)
வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்

சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?

=============================================
வானவில்லின் அத்தனை வண்ணமும்
உன் ஆச்சரியங்களின் முன்
போட்டியிட முடியவில்லையோ!!!

(ரிதன்யாவின் அத்தை பூ பூவா பூர்ணிமா)

1 கருத்து:

Thenie சொன்னது…

வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்

சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?