ஆளில்லா டீக்கடைல யாருக்கு டீ ஆத்தறதுன்னு பாத்தா எல்லாம் ஆகாதுங்க, ஆத்தறேன் வந்து சேருங்க எல்லாரும்.
ரிதன்யாவுக்கு இன்னைக்கு பிறந்த நாள் (அதாங்க எனக்கு)
இன்னிக்கு என்ன வாழ்த்தினவங்களுக்கு என் நன்றிகள்
++++++++++++++++++++++++++++
வாழ்த்தினவங்க
++++++++++++++++++++++++++++
தேனு (பிரிய அத்தை இருப்பது கொழும்புல)
வானுலகம் கொஞ்சம்
அலுத்துப் போக
பூமிக்குப் போகலாம்
முடிவெடுத்ததாம் தேவதை !
மனிதராக போவதெனில்
பிறந்து குழந்தையாய் வாழ வேண்டும்
கடவுள் சொன்னாராம்
தேவதையும் யோசித்தாளாம்!
தனக்கென இல்லம் தேடி
அங்கே தன் பிறப்பை முடிவெடுத்தாளாம்
இன்று போல ஐந்து வருடம் முன்பாக
தேவதை வந்து சேர்ந்தாளாம் குழந்தாயாய்!
எங்கள் வீட்டு தேவதைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
++++++++++++++++++++++++++++
ரிதன்யா
அத்தை என்பாள்
சில நேரம் அக்காவும் சொல்லுவாள்
ஆனால் எப்போதுமே
தேனாண்டி தான்!
ஆம் அவள் அன்பின் முன்
நான் ஆண்டிதான்!
சுருள் முடியுடன்
நித்திரை கலைந்து
விளையாடியது முதல்
அவளின் ஆளுகை என் மனதில்!
தூக்கிச் செல்ல உடல் வலித்தாலும்
மனது வலிக்காத சுமை அவள்!
கொஞ்சம் கோபம்
நிறைய பிடிவாதம்
அளவில்லாத அன்பு
புரிந்து கொள்ளும் பக்குவம்
ரோஜாத் தோட்டமே வியந்தது
ஓடும் ரோஜா இவளென!
ஒரு வருடம் வாடாது என
வாங்கி வந்த குறிஞ்சிப் பூவிலும்
கொஞ்சம் கூட மறக்காத
ரிதன்யாவின் புன்னகை
மறக்கடிக்க முடியாத வாசம்
மதுரை மல்லிகையிலும் இல்லை!
நிலவுடன் இரவில் பேசலாம்
ஆசையுடன் அழைத்தேன் 12 மணிக்கு
ஆண் குரல்(:P) தூங்கிட்டா என்றது
ஏக்காமாய் முடிந்து போன இரவில்
கனவில் கூட வந்து தேனாண்டி என்றாள்!
திடீரென செல் அழைக்க
எடுத்துப் பார்த்தேன் அண்ணா
தேனாண்டி இன்னிக்கு எனக்கு பர்த்டே
தேன் குரலா இல்லை கனவா
புரியும் போது பெருமையாய் இருந்தது
தேவதையுடன் பேசியிருக்கிறேன் நான் என!
பட்டு மிஸ்ஸிங் யூடா (கண்ணீர் திரை இனி எழுத முடியாது)
++++++++++++++++++++++++++++
செந்தில்
(அப்பாவின் நண்பர் சென்னைல இருந்து)
ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
++++++++++++++++++++++++++++
துரை.ந.உ
(அப்பாவின் நண்பர் தூத்துக்குடில இருந்து)
குட்டிப் பாப்பாவுக்கு மாமாவின் வாழ்த்துக்கள்
++++++++++++++++++++++++++++
டாக்டர். சங்கர் குமார் to muththamiz
அத்தையென அழைக்க ஒருத்தி!
வாழ்த்துகள்!
++++++++++++++++++++++++++++
சாந்தி (குழும அத்தை இவங்க )
தங்கமாய் தாங்கிட தாயிருக்க
தரணிக்கு புகழ்சேர்க்க தகப்பனிருக்க
தலைமகள் வெற்றிகொள்ள வாய்ப்பிருக்க
தவமாய் வந்துதித்த செல்லக்கிளியே
அன்பினால் அனைவரையும் நீராட்டி
அகப்பண்பினால் பலநேசம் பெறுவாயம்மா
அறிவுத்திறன் ஜொலிக்க சரஸ்வதியும்
அழகாய் அருகிருந்து வாழ்த்தணு்மம்மா.
பல்லாண்டு வள நலமும் நீயே பெற்று
பலகாலம் சுகமாய் வாழ்ந்திடணும்
பார்போற்றும் புகழெல்லாம் உனைசேர்ந்து
பாரதமும் உன்பெருமை போற்றிடணும்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இளவரசியே..
++++++++++++++++++++++++++++
சுவாதி சுவாமி
(இவங்களும் அத்தைதான்)
குட்டித் தேவதைக்கு எமது அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
இன்று போல் என்றும் இனிய தேவதையாக உலகை வலம் வந்து,
அரிய சாதனைகள் பல செய்து, பெருமையாய் வாழ நல் வாழ்த்து பாடுகிறோம்.
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா!
இதயம் நிறையவே தமிழ் கவிதை பேசி வா!
மலரும் மணமும், நதியும் நடையும்
தலை கவிழும் உன் அழகின் முன்னே
இதயம் முழுக்க இனிமை சுவைக்க
பதியம் வைத்த தமிழ் வாழ்த்து உனக்கே!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
அன்புடன்
சிநேகன் ,சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.
++++++++++++++++++++++++++++
அஹமத் சுபைர்
(அப்பாவின் நண்பர்)
என் பிறந்த நாள் வாழ்த்துகளை இளவரசியிடம் சொல்லிடுங்க தேனாண்டி :-)
++++++++++++++++++++++++++++
நாயகன்
ரிதன்யா குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கிறேன்.
என் சார்பாக மஹி அண்ணா நீங்களே ஒரு சின்ன சாக்லேட் மற்றும் ஒரு பொது
அறிவு சம்பந்தமான புத்தகம் பரிசாக வழங்கவும்..
++++++++++++++++++++++++++++
சஹாரா தென்றல் (அத்தை)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதன்யாவுக்கு
மறக்காம வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணா
++++++++++++++++++++++++++++
கிருச்சுனசுவாமி பொன் சுந்தர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க மகி சார், ரிதன்யா மாடத்துக்கு
++++++++++++++++++++++++++++
வி ரமேஷ்
இனிய மலர்ந்த நாள் வாழ்த்துகள் ரிதன்யா
++++++++++++++++++++++++++++
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு. மஹி(மாம்ஸ்) அவர்களின் குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
அச்சு(சுதாகர்)
++++++++++++++++++++++++++++
பாலாஜி பாஸ்கரன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரிதன்யா!
(மகி, சாக்கியை தேனுசா கிட்ட காட்டிடாதீங்க! )
++++++++++++++++++++++++++++
முகமூடி
மாம்ஸ்.. இதெல்லாம் அநியாயம்...
ஒரு சாக்கிகூட இல்லாம வெறும் நாலு நன்றிய சொல்லி ஏமாத்தப்பாக்குறீங்க...
குட்டி தேவதைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
++++++++++++++++++++++++++++
chillu karupatti
சில்லுக்கருப்பட்டி என்கின்ற உமா(இவுங்க நாகப்பட்டினத்தில பெரிய ஜாக்கிங்க, குதிரை ஓட்டற ஜாக்கி இல்ல, ரோடியோ ஜாக்கிங்க)
எங்கள் வீட்டு செல்ல குட்டிக்கு அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....
++++++++++++++++++++++++++++
வினோத்-VINOTH
(இவருதான் தமிழ் நண்பர்களுக்கு தலைங்க)
ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
++++++++++++++++++++++++++++
Joseph Kuriyan
குட்டி தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
எல்லா நலனும் பெற்று வாழ இறை வேண்டுதலோடு
ஜோசப் பி கே
இருட்டாய் இருக்கிறது என்பதைவிட
சிறு வெளிச்சத்தையாவது ஏற்படுத்த முயற்சி செய்.
++++++++++++++++++++++++++++
Arul Jothi
en iniya pirantha naal nalvazhthukal............. to rithanya kutty
++++++++++++++++++++++++++++
ராஜா
ரிதன்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
++++++++++++++++++++++++++++
உதயன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
++++++++++++++++++++++++++++
முகமூடி
நடந்துவா.. தேவதையே...
சின்னச்சின்ன கனவுகளுக்குள்
விகசித்து விரிந்து கிடக்கிறது வானம்....
வண்ணத்துப்பூச்சியாய் நீ
வருடிவிட்டதில்
தீர்க்கதரிசியாகிப்போயின பூக்கள்...
உன் மழலை
மொழி கேட்கத்தான்
ஒலிகள்
புதுப்பரிணாமம் பெற்று
மொழிகளாகிப்போயிருக்கிறது...
உன் சருமத்தைத்
தீண்டியதால் காற்றும்
தென்றலாய் இதமூட்டுகிறது...
மழையின் சொட்டுக்கள்
நீ
இதழ்பதிக்கும்
குளம்பிக்கோப்பையில்
மனதைப் பறிகொடுத்து
குழம்பித்தான் கிடக்கிறது....
உன் பாத விரல்கள்
பஞ்சுமெத்தை போல...
நீ மிதித்து நடந்ததில்
பூமியெங்கும் புல்வெளிகளாகி
பூரித்துக்கிடக்கிறது....
நீ... நான்... நிலா....
வானம் பார்த்துச்
சோறு ஊட்ட நினைக்கிறோம்..
நம் மழலைகளுக்கு..
விஞ்ஞான யுகத்தில்கூட
இன்னமும் வானம் பார்த்த
பூமியாகவே வாழ்வு இனிக்கிறது...
நேச விதையை
மண்ணில் ஊன்றி
அந்நாந்து பார்த்ததில் -
விண்ணொத்து வளர்ந்து
மண்ணில் வேரூன்றியிருந்தது..
ஒரு விருட்சம்...
அலைபேசிச் சத்தங்களும்..
அழைப்பு மணிச் சந்தங்களும்...
சத்தமாய் சிலமுறை
கத்திவிட்டுப்போயின
உன்
பிறந்த நாள் - உலகின்
சிறந்த நாள் என்று சொல்லி...
ஐந்தாவது அகவையில்
அடியெடுத்த உன்
தளிர் நடை கண்டு
விடியலுக்குத் தொடங்கிவிட்டது
வானம்...
உன்
வழிநடத்தலுக்கென ஏங்கி
நாளைய சமுதாயம்
வழிவிட்டுக் காத்திருக்கிறது...
நாங்களும் காத்திருக்கிறோம்
ஏக்கத்துடன் சிலநேரம்
தூக்கமின்றிப் பலநேரம்...
நடந்துவா...
உயிரினம் வாழும்
இந்த ஒரே பூமி
ஒரு புதிய பரிணாம
வளர்ச்சிக்கென
ஏங்கிக் காத்துக்கிடக்கிறது...
ரிதன்யா பாப்பாவுக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
++++++++++++++++++++++++++++
*
நீ
வானவில்லை
ரசித்திருந்த தருணமொன்றில்
என் மாமன் எடுத்திருந்த
புகைப்படத்திலுனை பார்த்தேன் முதலாய்
நான்!
*
அலைபேசியில்
ரீங்காரமிடும் உன் குரலை
மீட்டும் இதழ்கள் ஆச்சர்யத்தில்
திறந்திருந்த அந்த அழகினை
கவிதையாய் வடித்தெடுத்து
அனுப்பினேன் மாமனுக்கு!
*
மகளுக்கு
கவிபுனைந்து மாமனிடம்
கொடுத்த
முதல் மாப்பிள்ளை நானாக தான் இருப்பேனோ!
*
"ரிதன்யா"
பெயருக்கு ஏற்றார்போல்
ரிதமாய் ஒலிக்கும்
உன் மழலைமொழியில்
மகிழுமடி உலகமே"
இந்த மாமன்
மயங்கித்தான் போனேனடி
மயிலிறகே!
*
ஐநூறு மைல்
தாண்டி வந்திருந்தேன்
உனை பார்க்க!
வந்தவுடன் மடியமர்ந்து
மழலைமொழி பேசி நீ
மழையாய் பொழிந்த அன்பிலே
நனைந்து போய் நின்றேனடி
நகைக்குயிலே!
*
நேற்று
உன் பிறந்தநாளென்று
முட்டாப்பய மாமனெனக்கு
தெரியாம போயிடுச்சு
செல்லமே!
*
விடுமுறையில்
போயிருந்தேன்!
இப்போ விட்டுப்போன
முறையா எட்டி நின்று
பார்க்குறேண்டி செல்லமே!
*
அருகில் வந்து
மடியமர்த்தி காதுமடலில்
உனக்கு மட்டும் சொல்லுறேண்டி
செல்லமே!
இன்னைக்கு போல
என்னைக்கும் நீ
நல்லா இருக்கோனுமடி செல்லமே!
*
"இனியபிறந்த வாழ்த்துகள் ரிதன்யா"
--
என்றும் அன்புடன்
பரட்டை.
(திருத்தப்பட்டும் திருந்தாத தலைகள் இன்னும் உலவுவதால்)
http://jthanigai1.blogspot.com/
http://parattaionline.blogspot.com/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொக்கத்தங்கம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
மழைக் காலம், கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!
மாம்ஸ் பெத்ததால் நீ மருமகளா -இல்லை
நீ மருமகள் ஆனதால் அவர் மாம்ஸ்சா
எது எப்படி இருந்தாலும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்டா செல்லம் !!
-
கோல்ட் மாரி
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
தொல்லை பண்ணுவோர் சங்கம்
++++++++++++++++++++++++++++
மாம்ஸ், உங்க குட்டி தேவதைக்கு என் இனிய பிறாந்தநாள் வாழ்த்துகள்
அன்புடன்
ரோபோ
++++++++++++++++++++++++++++
இந்த மாமனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் குட்டி தேவதைக்கு ..
வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ...
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குட்டிப் பாப்பாவுக்கு இந்த 'தாத்தா'வின் வாழ்த்துக்களும்! :-))
தமிழன் வேணு
++++++++++
கந்தவேல் ராஜன்(மதுரை)
செல்லக்குட்டி ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
++++++++++
ராஜராஜன்
குட்டி தேவதை ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
++++++++++++
M.RISHAN SHAREEF
to therakathal, தமிழ், thiruvilayadal, piravakam, முத்தமிழ், tamil2
குட்டிப் பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
+++++++++++++++++
Suthersan C
Tamil2Friendsரிதன்யா ஐ பெயர் நல்லா இருக்கே பாப்பாவுக்கு. ரிதன்யா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
++++++++++++++
விஜி(கனடா)
to muththamiz, tamil2, Piravakam
ரிதன்யா
அத்தை என்பாள்
சில நேரம் அக்காவும் சொல்லுவாள்
ஆனால் எப்போதுமே
தேனாண்டி தான்!
ஆம் அவள் அன்பின் முன்
நான் ஆண்டிதான்!<<<<
நெஞ்சைத்தொட்ட வரிகள்...தேனு...மிக அழகு...
ஒரு பாப்பா இப்படியொரு பாசக்கவிதை வடிக்குதே....
>>>சுருள் முடியுடன்
நித்திரை கலைந்து
விளையாடியது முதல்
அவளின் ஆளுகை என் மனதில்!
தூக்கிச் செல்ல உடல் வலித்தாலும்
மனது வலிக்காத சுமை அவள்!<<<
குழந்தைகள் எப்போதும் சுகம்..
கொஞ்சம் கோபம்
நிறைய பிடிவாதம்
அளவில்லாத அன்பு
புரிந்து கொள்ளும் பக்குவம்
ரோஜாத் தோட்டமே வியந்தது
ஓடும் ரோஜா இவளென!<<<<<
அடடா! நம்மளை அப்படியே உரிச்சு வைச்சிருக்குதே!! குழந்தைகள் என்றாலே இப்படித்தான் போலும்:)))
<<<ஒரு வருடம் வாடாது என
வாங்கி வந்த குறிஞ்சிப் பூவிலும்
கொஞ்சம் கூட மறக்காத
ரிதன்யாவின் புன்னகை
மறக்கடிக்க முடியாத வாசம்
மதுரை மல்லிகையிலும் இல்லை!<<<<
வாசம் உங்கள் வசம்.
நிலவுடன் இரவில் பேசலாம்
ஆசையுடன் அழைத்தேன் 12 மணிக்கு
ஆண் குரல்(:P) தூங்கிட்டா என்றது
ஏக்கமாய் முடிந்து போன இரவில்
கனவில் கூட வந்து தேனாண்டி என்றாள்!
நல்லது நல்லது!! :) குழந்தைங்க கனவில் குழந்தைங்க தான் வரும்.
திடீரென செல் அழைக்க
எடுத்துப் பார்த்தேன் அண்ணா
தேனாண்டி இன்னிக்கு எனக்கு பர்த்டே
தேன் குரலா இல்லை கனவா
புரியும் போது பெருமையாய் இருந்தது
தேவதையுடன் பேசியிருக்கிறேன் நான் என!
பட்டு மிஸ்ஸிங் யூடா (கண்ணீர் திரை இனி எழுத முடியாது)
துடைத்துவிட்டு எழுத வேண்டியதுதானே...இனிய வாழ்த்தை மருமகளும் ரசிப்பாளே!..
எத்தனை எத்தனை இடர்கள் வந்து
நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அத்தனையும்
பறந்துபோகும் கொஞ்சும் மழலைமொழியில்
நெஞ்சம் அள்ளிச்செல்லும் குழந்தை
உள்ளம் என்றும்!
மாறா சிரிப்புடனே மறவாத்தமிழுடனே!
வாழ்க வளர்க என்றும்!
செல்லக்குட்டிக்கு இனிய வாழ்த்துகள்!
++++++++++++++++++++++++++++
Gokul Kumaran
அன்பு ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/
+++++++++++++
vishalam raman ( piravakam)
குட்டிதேவதைக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள் அன்புடன் விசாலம்
++++++++++++++++
piravakam
இந்த மாமனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் குட்டி தேவதைக்கு ..
வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ...
++++++++++++++++++
காமேஷ்
muththamiz, தமிழமுதம்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிதன்யா பாப்பாவுக்கு
~காமேஷ்~
+++++++++++
therakathal
ரிதன்யாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்
+++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாட்ல சொன்னவங்க
emalathithan: உங்களது குட்டி தேவதைக்கு என்னுடைய பிறந்த நாள் நல வாழ்த்துகள்....
achusudhakar: convey my wishes to your குட்டி தேவதை
Balaji: என்னுடைய இனிய வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் குட்டி தேவதைக்கு!
Priya: happy birhday rethy kutty
chilludhosth007: hi anna
kuttiku birthd ay wishes nanum ashwinum wish panrom
sollidunga
Gold: மாம்ஸ் என்னோட மருமகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லுங்கோ !
Charu: மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்
தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லுங்க
Mani: many more whishes to your little angel by the name of god...
5 கருத்துகள்:
பட்டு குட்டி கலக்குற போ
Happy Birthday Reththu kutty...
Raage
பிறந்தநாள் வாழ்த்துகள்
காலம் தவறினாலும் வாழ்த்து தவறாது!
ஒவ்வொரு நாளும் இனிய நாளாய் உருவெடுத்து உன்னைத் தாலாட்டும் என மாமா அமெரிக்காவில் இருந்து வாழ்த்துகிறேன் கண்ணே!
செல்லக்குட்டி அழகா இருக்கா இருக்கா மாமு..
சுத்திபோடுங்க
கருத்துரையிடுக