சனி, 20 டிசம்பர், 2008

விடுகதைகள்

விடுகதைகள்


1. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?

வெண்டிக்காய்

2. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

நிழல்

3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

கடிதம்

4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

மிளகாய்

5. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?

கண்ணீர்

6. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

காற்று

7. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?

பென்சில்

8. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

பூமி

9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?

முட்டை

10. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?

பாம்பு

11. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?

கடல்நீர்

12. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?

பலாப்பழம்

13. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

தீக்குச்சி

கருத்துகள் இல்லை: